தமிழ்நாடு
ஆய்வுக்கு நடுவே ஆசி: கொட்டும் மழையில் ஆசி பெற்ற மணமக்கள்!
கொட்டும் மழையில் தமிழக முதல்வர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இன்று திருமணம் செய்த மணமக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவத்தின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 நாட்களாக மழையையும் பொருட்படுத்தாமல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை முழுவதும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பதும் அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சரே உத்தரவிடுவது துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திருமணம் முடித்த மணமக்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்ய வந்தபோது அவரிடம் ஆசி பெற்றனர். மணமகள் கௌரி சங்கர் மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கு தமிழக முதல்வர் கொட்டும் மழையில் ஆசி செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.