சினிமா செய்திகள்

தமிழக முதல்வரை நடிகர் அர்ஜூன் சந்தித்தது ஏன்? விடையளிக்கும் புகைப்படங்கள்!

Published

on

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரையும் நடிகர் அர்ஜுன் சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தற்போது இந்த சந்திப்பின் காரணம் தெரிய வந்துள்ளது.

நடிகர் அர்ஜூன் போரூர் அருகே ஆஞ்சநேயர் சுவாமி கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக தளத்திற்கு வருகை தரும்படி முதல்வர் மற்றும் அவருடைய மனைவிக்கு அழைப்பு விடுக்கவே நடிகர் அர்ஜுன் முதல்வரை சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இன்று நடைபெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் குறித்து நடிகர் அர்ஜுன் கூறியபோது ’இந்த கோவில் தனது 17 வருட கனவு என்றும் இந்த கனவு நனவாக தன்னுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த கோவில் கட்டுவதற்கு தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறிய அவர் இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை ஒற்றைக் கல்லில் 180 டன் எடையுடன் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலுக்கு தமிழக முதல்வரின் துணைவியார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் வருகை தந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த கோவில் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளதாகவும், கொரோனாவால் அவதியுறும் மக்கள் ஆஞ்சநேயரின் ஆசியை பெற வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அர்ஜுன் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version