தமிழ்நாடு

கொத்தாக வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள்… பரவும் வதந்தி… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published

on

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#image_title

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

வேண்டும் என்றே வதந்தி பரப்பி அச்சத்தையும் பீதியையும் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்த பாதிப்பும் நேராது. வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடமாநில தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அதனை நம்ப வேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version