தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்களை கொல்லும் பலிபீடம்: முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு!

Published

on

நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார் என்பதும் இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் இந்த மசோதா குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு தான் என்றும், மாணவர்களின் மருத்துவ கனவில் தடுப்புச்சுவரை நீட் எழுப்புகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் நீட் நுழைவு தேர்வு முறைகேடுகள் எப்படி எல்லாம் நடந்ததா என்பதை பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீட் தேர்வு மாணவர்களை கொள்ளும் பலி பீடம் என்றும் நீட் விலக்கு மசோதா சட்டசபையின் இறையாண்மையை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

142 நாட்களுக்கு பின்னர் ஆளுனர் மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்றும் ஏகே ராஜன் குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் என ஆளுநர் கூறியிருப்பது சரியல்ல என்றும் ஏகே ராஜன் குழு அமைக்கப்பட்டது குறித்தும், ஏகே ராஜன் குழுவின் பணிகள் குறித்தும் விரிவான விளக்கத்தை முதல்வர் அளித்தார்.

நீட் என்பது கல்வி முறையல்ல என்றும் பயிற்சி முறை என்றும் தகுதி என்ற பெயரிலான அறிவு தீண்டாமையை ஒழிக்கவே நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். சில மாணவர்களை சிறைக்கும் பல மாணவர்களை கல்லறைக்கும் அனுப்பிய நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் கூறிய முதல்வர் முக ஸ்டாலின் அரசியல் சாசனப்படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற சூழலை ஆளுநர் உருவாக்க மாட்டார் என நம்புகிறேன் என்றும் சட்டசபையின் சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் ஆளுநர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இறுதியில் ’தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க’ என மூன்று முறை முழக்கமிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

seithichurul

Trending

Exit mobile version