தமிழ்நாடு
அரசியல் அமாவாசைகள் சொல்லும் புது ஜோசியம்: அதிமுக குறித்து முதல்வர் ஸ்டாலின்!
திமுக ஆட்சி இருபத்தி ஏழு அமாவாசைகள் மட்டுமே இருக்கும் என புதிதாக வந்த அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிமுக மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தார். நான் மிசாவை பார்த்தவன் என்றும் என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி என்னை மிரட்ட முடியும் என்று கனவில் கூட நினைக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
மேலும் இன்னும் இருபத்தி ஏழு அமாவாசைக்கு மட்டுமே திமுக ஆட்சி இருக்கும் என்று அதிமுகவினர் ஜோசியம் கூறுகிறார்கள் என்றும் ஆனால் அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான் மக்கள் அவர்களை ஒதுக்கி வைத்துள்ளனர் என்றும் தற்போது அதிமுக அஸ்தமனத்தில் உள்ளது என்றும் கூறினார்
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தீவிரவாத போராட்டம் என்றும் தேச விரோத போராட்டம் என்றும் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார் என்றும் அவரால் மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்
முதலமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் முழுக்க முழுக்க அதிமுகவை மட்டுமே அவர் விமர்சனம் செய்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது