தமிழ்நாடு

ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுகிறதா? அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published

on

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக இருக்கும் நிலையில் அதை 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசு எப்போது வந்தாலும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரப்படும் என்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால் அரசு ஊழியர்களுக்கு மேலும் சில சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக கடந்த அதிமுக அரசு உயர்த்திய நிலையில் மீண்டும் 58 ஆக குறைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக செட்டில்மென்ட் தொகை வழங்கப்படாது என்றும் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பெறும் வகையில் அரசு பத்திரமாக கொடுக்கலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓய்வு பெறும் வயது 58 என குறைக்கப்பட்டால் 2 ஆண்டுகள் பணி குறைக்கப்படுவது மட்டுமன்றி செட்டில்மெண்ட் தொகையும் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் என்ற தகவலை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் தமிழக அரசிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version