Connect with us

தமிழ்நாடு

தினமும் 3 வேளையும் அன்னதானம்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தின் இந்து அறநிலை துறை அமைச்சராக சேகர்பாபு அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக கோவில்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோயில் நிலங்களை மீட்பது, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது உள்ளிட்டவற்றை கூறலாம். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர், திருத்தணி மற்றும் சமயபுரம் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களில் தினந்தோறும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி இன்று முதல் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படும் என்றும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக வழங்கப்படும் என்றும் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்த பின்னரும் நேரடியாக உணவு வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என நம் முன்னோர்கள் கூறியிருந்த நிலையில் இப்போதைக்கு 3 கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் மேலும் சில கோவில்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோயில்களில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் அந்த திட்டம் தற்போது விரிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம்8 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்19 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்32 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்44 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்53 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!