தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று அறிவிப்பா?

Published

on

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனையில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெகுவாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் வரும் 19ஆம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதாவது 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கட்டுப்பாடுகளுடன் பார்கள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version