தமிழ்நாடு

அண்டை மாநிலங்களில் அதிகரிக்கும் ஒமிக்ரான்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே டிசம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் உடன் இந்த ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஊரடங்கு நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்

மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று அவர் ஆலோசனை செய்த பின் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Trending

Exit mobile version