தமிழ்நாடு

நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருவதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் ஓடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பதும் அதுமட்டுமின்றி ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தற்போது உலகில் மிக வேகமாக பரவி வருவதால் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் தமிழக முதல்வர் இது குறித்து விரிவான அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version