தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

நாளை மற்றும் நாளை மறுநாள் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை முதல் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் என்பதும் அங்குள்ள மக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்

மேலும் தீபாவளிக்காக வெளியூர் சென்றிருக்கும் பொதுமக்கள் உடனடியாக திரும்பி வர வேண்டாம் என்றும் சென்னை நிலைமை சரியானதும் திரும்பி வந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனவே அரசு ஊழியர்களுக்கும் கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தீபாவளி விடுமுறைக்காக சென்ற பொதுமக்கள் இன்று இரவு சென்னைக்கு திரும்ப உள்ள நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு காரணமாக இரண்டு நாள் கழித்து மழை நின்றவுடன் பொதுமக்கள் சென்னைக்கு கிளம்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version