தமிழ்நாடு
காத்துல கூட ஊழல் செய்யும் கட்சி திமுக: விஜய்யின் ‘கத்தி’ பட வசனத்தை கூறிய முதல்வர்!
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் வசனத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கத்தி’ படத்தில் 2ஜி ஊழல் என்றால் என்ன? காற்றில் கூட ஊழல் செய்தார்கள் என்று ஒரு வசனத்தை விஜய் கிளைமாக்ஸில் பேசியிருப்பார். அந்த வசனத்தை முதல்வர் நேற்று தனது பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொண்டார்.
முதல்வர் நேற்றைய பிரச்சாரத்தில், ‘காற்று என்பது கண்ணுக்குத் தெரிகிறதா? தெரியாது. ஆனால் அந்த கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி இந்தியாவிலேயே திமுக ஒன்று தான் என்று கூறினார். அதுதான் 2ஜி ஊழல் என்று கத்தியின் வசனத்தை அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து சமீபத்தில் முதல்வர் விஜய்யின் ‘கத்தி’ படத்தை பார்த்து இருப்பார் என்றும் அதனால் அந்த வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.