தமிழ்நாடு

சிஏஏ விவகாரம்: சிடி ரவி கருத்துக்கு முதல்வர் பழனிசாமி பதில்!

Published

on

மத்திய அரசின் சிஏஏ விவகாரத்தில் மாநில அரசான அதிமுக அரசு தலையிட முடியாது என பாஜக பிரமுகர் சிடி ரவி கூறியுள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து சிடி ரவி இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது மாநில அரசாங்கத்தால் மத்திய அரசின் சிஏஏ விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அந்த கருத்தை வாபஸ் பெற வலியுறுத்துவோம் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிஏஏவை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தான் நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ராஜ்யசபாவில் சிஏஏ வாக்கெடுப்புக்கு வந்தபோது அதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக வாக்கு அளித்தது என்பதும், அதிமுக வாக்களித்ததால் சிஏஏ சட்டம் நிறைவேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version