தமிழ்நாடு

பொதுத்தேர்வு ரத்து என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு: எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?

Published

on

9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்

இன்று சட்டப்பேரவை கூடிய உடன் முதல்வர் பழனிசாமி இந்த முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார். 9 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்பதும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தனர் என்பதும் தெரிந்ததே

author avatar
seithichurul

Trending

Exit mobile version