தமிழ்நாடு
எந்த கொம்பனாக இருந்தாலும்… கொந்தளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பீகார் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து தொழில் செய்து கொண்டிருக்கக் கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தம்முடைய வயிற்றைக் கழுவிக் கொள்வதற்காக, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எப்படியாவது இங்கு கலவரத்தை உருவாக்கி அரசியல் லாபம் தேட நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். இன்று காலையில் கூட பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உடன் ஃபோனில் பேசிவிட்டு தான் வந்திருக்கிறேன்.
எந்த காரணத்தைக் கொண்டும், எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் இந்த கூட்டணியை நீங்கள் சிதைக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்து யார் முயற்சித்தாலும், அவன் எந்த கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஆவேசமாக கூறினார்.