Connect with us

தமிழ்நாடு

கையடக்க CPU கண்டுபிடித்த மாணவருக்கு தமிழக அரசு உதவி: நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்

Published

on

திருவாரூரைச் சேர்ந்த மாதவ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கையடக்க கம்ப்யூட்டர் CPU உருவாக்கியது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவர் கையடக்க CPU உற்பத்தி செய்து ஆன்லைன் மூலம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் அரசு உதவி செய்தால் இதை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாணவர் மாதவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரது உயர் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு உதவும் என்றும் அறிவித்துள்ளார்.

டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கும் மாணவர் மாதவ் நம்முடைய மாநிலத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (28.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமத்தைச்‌ சேர்ந்த செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்கள்‌ சந்தித்து, தான்‌ புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச்‌ செயலாக்கக்‌ கருவியைக்‌ (ப) காண்பித்து வாழ்த்து பெற்றார்‌.

திருவாரூர்‌ மாவட்டம்‌, பழவனக்குடி கிராமம்‌, கலைஞர்‌ நகரில்‌ வசித்து வரும்‌ திரு. சேதுராசன்‌ என்பவரின்‌ மகன்‌ செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌, ஒன்பதாம்‌ வகுப்பு பயின்று வருகிறார்‌. இவர்‌ கணினியில்‌ மிகுந்த ஆர்வம்‌ கொண்டு, கணினி மொழிகளை படித்துள்ளார்‌. இவர்‌ கொரோனா ஊரடங்கு காலத்தில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌ கையடக்க CPU கண்டுபிடித்து உள்ளதாகவும்‌, இதற்காக இரண்டு ஆண்டுகளாகக்‌ கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில்‌ வெற்றி பெற்றுள்ளார்‌ என்பதைக்‌ கேள்விப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌-யை நேரில்‌ அழைத்துப்‌ பாராட்டினார்‌. இக்கருவி அனைவரிடத்திலும்‌ சென்றடைய ஏதுவாக டெராபைட் இந்தியா என்ற நிறுவனத்தினைத்‌ தொடங்கி, இணையதளம்‌ மூலமாக மிகவும்‌ குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்‌ என்ற தகவலைக்‌ கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அம்மாணவனை வாழ்த்தினார்‌.

செல்வன்‌ எஸ்‌.எஸ்‌. மாதவ்‌ அவர்களின்‌ கண்டுபிடிப்பினைப்‌ பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும்‌, ஆராய்ச்சிக்கும்‌ தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும்‌ செய்யும்‌ என்று உறுதியளித்தார்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!