தமிழ்நாடு

ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனைக்கு விரைகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க முதல்வர் உடனடியாக வேலூர் விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திருப்பதி சென்றார். திருப்பதி சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை செய்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலையில் முதல்வருடன் திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த முதல்வரின் செயலாளர் ஸ்ரீதரனுக்கு திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஸ்ரீதரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக உயர் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஸ்ரீதரன் திருப்பதியில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு விரைகிறார் என்ற தகவல் வந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version