தமிழ்நாடு

மக்கள் நலமுடன் வாழ பிராத்தனை செய்தேன்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

Published

on

தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் பல பிரச்சனைகள் வந்தும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதே ஊழல் புகார்கள் வாசிக்கப்படுகிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தகுதி நிக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மீதான தீர்ப்பு வர உள்ளது. இதுபோன்ற காரணங்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியாக உள்ளது. இந்த அரசு விரைவில் கவிழும் என எதிர்க்கட்சிகள் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருப்பதி கோவிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை செய்ததாக தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version