தமிழ்நாடு

நானா பேடி?: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஆளும் கட்சியான அதிமுகவையும், தமிழக அரசையும், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு தனது விமர்சனங்கள் மூலம் நெருக்கடி கொடுத்து வரும் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமுறை பேடி என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக நேற்று நடைபெற்ற திமுகவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் சேலத்தில் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த கூட்டத்தில் ஸ்டாலினை முதல்வர் சரமாரியாக விமர்சித்தார். அவர் ஏன் அடிக்கடி லண்டன் செல்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பேடி என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். நானா பேடி? ஒரே தொகுதியில் ஒன்பது முறை நின்றுள்ளேன். நாட்டு மக்களுக்காக உழைக்க இங்கு வந்துள்ளேன். அவர்களைப் போல குடும்ப உறுப்பினர்கள் சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக வரவில்லை. ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவில் இருக்கிறார். கனவுதான் காண முடியும். எப்போதுமே அவர் முதல்வராக முடியாது. ஏனெனில் அவர் அடிக்கடி லண்டன் சென்று வருகிறார். எதற்காகச் செல்கிறார் என்று தெரியவில்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

Trending

Exit mobile version