தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயண முழு விபரம்!
![edappadi 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/edappadi-1-1.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்னிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை மறுதினம் வெளிநாட்டுக்கு புறப்படும் அவர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 14 நாட்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள உள்ள அவரது பயண விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
முதல்வரின் இந்த பயணத்தில் அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அரசு அதிகாரிகள் செல்கின்றனர். அதன்படி ஆகஸ்ட் 28-ஆம் தேதி இங்கிலாந்து சுகாதாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர் லண்டனில் தொழில் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் செப்டம்பர் 2-ஆம் தேதி நியூயார்க்கில் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஃபாக்ஸ்கான் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவன உயர் அதிகாரிகளை சந்திக்கிறார். பின்னர் பஃபல்லோ கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை பார்வையிடுகிறார்.
செப்டம்பர் 7-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து தனது பயனத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி விட்டு பின்னர் துபாய் செல்கிறார் முதல்வர். அங்கு செப்டம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் எடப்பாடி பழனிச்சமி. அதனை முடித்துக்கொண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.