சினிமா

என்னை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் உள்ளது: பிக் பாஸ் மதுமிதா அதிரடி!

Published

on

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட நடிகை மதுமிதாவுக்கும் விஜய் தொலைக்காட்சி தரப்புக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி போலீசில் புகார் அளித்துள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் டிவியில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் இதுதொடர்பான எந்த வீடியோவும் ஒளிபரப்பப்படாமல் மதுமிதா போட்டியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதால் பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் மதுமிதாவுக்கும் விஜய் டிவி தரப்புக்கும் இடையே தற்போது மோதல்போக்கு வலுத்துள்ளது. வெளியே வந்த மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் சென்னை கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பேசப்பட்ட தொகையில் பாக்கித்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என மதுமிதா வலியுறுத்தி வருகிறார். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மதுமிதா நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி இதுவரையிலும் எனக்கு தகவல் எதுவும் வரவில்லை என கூறியுள்ளார் மதுமிதா. மேலும் என்னை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரம் உள்ளது என்று அதிரடியாக தொலைக்காட்சி தரப்புக்கு எதிராக பேசியுள்ளார் மதுமிதா.

seithichurul

Trending

Exit mobile version