சினிமா
வடிவேலு படத்துக்கு No சொன்ன நடிகைகள்…கதையையே மாற்றிய இயக்குனர்
24ம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் வடிவேல் மீது ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, கடந்த 4 வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருவழியாக பஞ்சாயத்து முடிவுக்கு வந்து அவர் மீது கொடுத்த புகாரை இயக்குனர் ஷங்கர் வாபஸ் பெற்றார்.
தற்போது லைக்காவுடன் 2 படங்கள் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வடிவேலுவே அறிவித்தார். மேலும், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அடுத்த படத்தை இயக்குவது அவர் இல்லையாம்!.. திடீரென மனதை மாற்றிய ரஜினி…
இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகளை படக்குழு அணுகியது. ஆனால், அவர்கள் எவரும் வடிவேலுடன் நடிக்க முன்வரவில்லையாம். எனவே, அப்படத்தில் கதாநாயகிக்கான காட்சிகள் அனைத்தையும் தூக்கிவிட்டு முழுக்க முழுக்க வடிவேலு பங்கு பெறும் காட்சிகளை அதிகரித்து கதையை முடித்துவிட்டாராம் இயக்குனர்.