சினிமா
கிறிஸ்தவம் என்பது மதமே கிடையாது.. செம்பி இயக்குநர் பிரபு சாலமன் சர்ச்சை பேச்சு!
![Prabhu-Solomon-16723052263x2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/Prabhu-Solomon-16723052263x2-1.jpg)
செம்பி படத்தின் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்புறீங்களா பிரபு சாலமன் என சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நிலையில், கிறிஸ்தவம் என்பது ஒரு மதமே கிடையாது என பிரபு சாலமன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
மைனா, கும்கி படங்கள் மூலம் வெற்றி இயக்குநராக வலம் வந்த பிரபு சாலமன் அதன் பின்னர் இயக்கிய கயல், தொடரி, காடன் உள்ளிட்ட படங்கள் பெரும் சரிவை சந்தித்தன. இந்நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள செம்பி திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.
இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் மற்றும் கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கான பிரத்யேக காட்சியில் பெரும் சர்சை கிளம்பியது.
செம்பி படத்தின் முடிவில் ”உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு” என்கிற வாசகத்துடன் படத்தை இயக்குநர் பிரபு சாலமன் முடித்துள்ளார். அதை பார்த்த சில பத்திரிகையாளர்கள் உலகில் கிறிஸ்தவம் மட்டுமே அன்பை போதிப்பது போல முடித்தது ஏன்? என்கிற கேள்வியை எழுப்ப இயக்குநருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.
அப்போது தான் பின்பற்றும் கருத்துக்களை படத்தில் வைத்துள்ளேன் என்றும், கிறீஸ்துவம் முதலில் ஒரு மதமே கிடையாது. அது மனித வாழ்வின் ஒரு வெளிப்பாடு என பேசியது மேலும், பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது. சமுக வலைதளங்களில் பிரபு சாலமனின் இந்த கருத்துக்கு ஏகப்பட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.