கிரிக்கெட்
டேரன் சமியின் இனவெறி புகாருக்கு கிறிஸ் கெய்ல் ஆதரவு!
2013-2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக ஆடியவர் டேரன் சமி. சில தினங்கள் முன்பு இவரை சக வீரர்கள் கறுப்பர் என்று அழைத்ததாகப் புகார் அளித்து இருந்தார்.
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கறுப்பின பிரபலங்கள் பலர் தாங்கள் பெற்ற அவமானங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 2013-2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐதராபாத் அணிக்காக டேரன் சமி ஆடிய போது தன்னை கறுப்பர் என்று சக வீரர்கள் சிலர் அழைத்ததாக சில நாட்கள் முன்பு இனவெறி புகார் அளித்து இருந்தார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் டேரன் சமியை காலு (கறுப்பர்) என்று அழைத்துள்ளார். அதற்கான ஆதாரத்துடன் போட்டோவை வெளியிட்ட டேரன் சாமி, இதற்காக சக வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
டேரன் சமிக்கு ஆதரவு தெரிவித்து டிவிட் போட்டுள்ள கிறிஸ் கெய்ல், “நீங்கள் பல வருடங்கள் இதுபோன்ற அவமானங்களைப் பெற்று வருகின்றீர்கள். சரியான விஷயத்திற்குக் காலம் கடந்து போராடுவது தவறு என்று கூற முடியாது. உங்களின் கதைக்குப் பல காரணங்கள் உண்டு சமி. விளையாட்டிலும் இனவெறி உள்ளது” என்று கிறிஸ் கெய்ல் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
It’s never too late to fight for the right cause or what you’ve experienced over the years! So much more to your story, @darensammy88. Like I said, it’s in the game!! ✊????✊????✊???? https://t.co/w7btmQ3cYf
— Chris Gayle (@henrygayle) June 9, 2020