இந்தியா

நிழலுலக தாதா சோட்டோராஜன் கொரோனாவுக்கு பலி!

Published

on

மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும் பாகிஸ்தானில் வசித்து வருபவருமான தாவூத் இப்ராஹிம் நெருங்கிய கூட்டாளி சோட்டா ராஜன். இவர் கொலை கொள்ளை ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அதிரடியாக சோட்டாராஜன் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோட்டா ராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சோட்டா ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version