சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவின் கடைசி எபிசோட்.. எப்போது ஒளிப்பரப்பாகும் தெரியுமா?

Published

on

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது கேரியரைத் தொடங்கிய சித்ரா வேந்தர் டிவி, மக்கள் டிவி, விஜய் டிவி போன்றவற்றில் விஜேவாக பணியாற்றினார். பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. ரசிகர்களால் சித்து என செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலையில் இன்னும் சில தகவல்கள் மர்மமாகவே உள்ளன.

சித்ராவின் குறும்பு கலந்த அப்பாவிதனமும் சுட்டிதனமும் இளைஞர்களை கூட சீரியல் பார்க்க வைத்தது. இதன் பிறகு தான் அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமடைந்தார். இவரது போட்டோ ஷூட்கள் இன்னும் இணைதளத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவரது காட்சிகள் இன்னும் சிறிது நாட்களே ஒளிப்பரப்பாகும். அவரது கதாப்பாத்திரத்திற்கு வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள் என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி வரை மட்டும் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவரது காட்சிகள் வரும் என சீரியல் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் புகழ் பெற்ற காவ்யா முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version