கிரிக்கெட்

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்: பிரித்திவ் ஷாவுக்கு போட்டியாக அடித்த கெய்லே!

Published

on

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவரது இந்த அபாரமான ஆட்டம் காரணமாக டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் சற்று முன் அந்த அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய 6வது ஓவரை ஜேமிசன் வீச அந்த ஓவரை எதிர்கொண்ட பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லே, 5 பவுண்டரி அடித்தார் என்பதும், ஒரே ஒரு பவுண்டரி மிஸ் ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று பிரதிவ்ஷா அடித்த அதிரடி ஆட்டத்திற்கு இணையாக இன்று கெய்லே அடித்து வருவதால் பஞ்சாப் அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏழாவது ஓவரில் 2 சிக்சர்களை அவர் விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version