சினிமா செய்திகள்

சிரஞ்சீவியின் பண்ணை வீட்டில் பயங்கர தீவிபத்து!

Published

on

நடிகர் சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று மாலை திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரும் முன்னாள் மத்திய மந்திரியுமான நடிகர் சிரஞ்சீவிக்கு ஐதராபாத்தில் உள்ள கோக்காபேட் பகுதியில் மிகப்பெரிய பண்ணை வீடு உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் ‘ஸைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்துக்காக இந்த பண்ணை வீட்டில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த அரங்கத்தின் ஒரு பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ அரங்கத்தின் பெரும்பகுதியை நாசப்படுத்தியது.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

seithichurul

Trending

Exit mobile version