சினிமா செய்திகள்

திரைப்பட கலைஞர்களுக்கு இலவசமாக தடுப்பூசி ஏற்பாடு செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்: தமிழிசை பாராட்டு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் இந்தியாவில் மூன்று லட்சத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவசமாக தடுப்பூசியைப் போட ஏற்பாடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் தனது சொந்த செலவில் 45 வயதுக்கு மேல் உள்ள சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை ஏற்பாடு செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் உதவியால் இந்த நடவடிக்கையை அவர் எடுத்து உள்ளதை அடுத்து பல சினிமா கலைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்

இதனை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சிரஞ்சீவி அவர்களுக்கு தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் இதோ:

 

 

 

Trending

Exit mobile version