சினிமா செய்திகள்
எதிர்பார்த்ததை போலவே வெளியேறினார் சின்னப்பொண்ணு: அடுத்தது தாமரையா?
![chinnaponnu cry - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/chinnaponnu-cry.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று சின்ன பொண்ணு வெளியேறுவார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்தன நிலையில் எதிர்பார்த்தபடியே நேற்று சின்ன பொண்ணு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28 நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை நாடியா சாங், அபிஷேக் மற்றும் சின்ன பொண்ணு ஆகிய மூவர் வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்த வாரம் தாமரை வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கமல் முன் பல பஞ்சாயத்துகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தாமரை கூறிய உடை குறித்து கமல்ஹாசன் கூறியபோது உடை என்பது ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது தான் உடையை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்று அறிவுரை கூறினார்.
நேற்றைய போட்டியில் இருந்து வெளியேறுவது சின்ன பொண்ணு என்பதை அறிவித்த கமல்ஹாசன் அவரை அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறி அவர் குறித்த மலரும் நினைவுகளை வீடியோக்களையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பஞ்சாயத்துக்கள், எலிமினேஷன் மற்றும் அறிவுரைகள் என சுவாரஸ்யமின்றி முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பிரச்சினைக்கு முழுவதுமாக தீர்வு காணாமல் அந்த பிரச்சனையை அப்படியே கமல்ஹாசன் விட்டுவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்ற ஐந்து நாட்களை விட கமல்ஹாசன் எபிசோடு நாட்களில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது கடந்த கால சீசன்களில் இருந்து தெரிய வந்தது. ஆனால் இந்த சீசனில் கமல்ஹாசனின் எபிசோடுகள் சுவாரஸ்யமின்றி உள்ளதாக கூறப்படுவது அந்த நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.