தமிழ்நாடு

வைரமுத்து கொடுத்த முத்தத்தில் அவர் கர்ப்பமாகிவிட்டாரா?: சின்மயி விவகாரத்தில் சர்ச்சை கருத்து!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழ் ஆர்வலரும், பேராசிரியருமான சிவபிரகாசம் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் சின்மயியை பாஜகதான் பின்னணியில் இருந்து இயக்குவதாக தெரிவித்தார்.

மேலும், சினிமா துறையில் பாலியல் ரீதியான விஷயங்கள் சாதாரணமான ஒன்றுதான். வைரமுத்து எந்த தவறும் செய்திருக்க மாட்டார். சின்மயி பேசுவது தான் தவறு. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் தெரிவிப்பார்களே தவிர சின்மயி போல நேரம், காலம் பார்த்து புகார் தெரிவிக்கமாட்டார்கள் என்றார்.

தொடர்ந்து வைரமுத்து தனக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிவபிரகாசம், முத்தம் கொடுத்தது எல்லாம் பாதிப்பே இல்லை. கர்ப்பமாகவா ஆக்கிவிட்டார்கள் என்றார் சர்ச்சையாக. மேலும் இவர்கள் கூறும் புகாரை அப்படியே ஏற்க முடியாது. புகாரில் உண்மை இருந்தால் அவர்கள் நீதிமன்றத்துக்கு தான் செல்ல வேண்டும் என்றார் அவர்.

seithichurul

Trending

Exit mobile version