தமிழ்நாடு

வைரமுத்து மீது மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் அளித்த சின்மயி!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி சில மாதங்களுக்கு முன்னர் மீடூ மூலம் பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் சினிமா உலகில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது இந்த விவகாரத்தில் வைரமுத்துவை சீண்டி வந்த சின்மயி தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதியளிப்பதில்லை. எனக்கு ஒரு தீர்வளியுங்கள் என்ற கோரிக்கையை சின்மயி மேனகா காந்தியை டேக் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சின்மயின் இந்த புகார் டுவிட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் மேன்னகா காந்தி, உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை மெசேஜ் அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது பதிலுக்கு சின்மயி பாராட்டை தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version