சினிமா

வைரமுத்துவை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: சின்மயி கோரிக்கை!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்து வந்த பாலியல் குற்றச்சாட்டுகள் மீதான விவாதம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த வைரமுத்து தற்போது மீண்டும் விளக்கம் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வைரமுத்து, என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் என்மீது வழக்குத் தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருவார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்துவின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்துள்ள பாடகி சின்மயி தனது டுவிட்டரில், வைரமுத்துவை உண்மை கண்டறியும் கருவியில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதுவே போதுமென்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version