உலகம்

3வது குழந்தை பெற்றுக்கொள்ள ரூ.1.14 லட்சம் மானியம்.. அதிரடி காட்டும் மாவட்ட நிர்வாகம்!

Published

on

சீனாவில் உள்ள லின்ஜீ மாவட்டத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.1.14 லட்சம் மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன.

ஆனாலும் சீனாவும் லின்ஜீ மாவட்டத்தில் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த முடிவு செய்த லின்ஜீ மாவட்ட நிர்வாகம் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 5000 யுவான் (இந்திய மதிப்பில் 57,000 ரூபாய்) மானியம் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குழந்தையின் வயது 3-ஐ அடையும் முன்பு 10,000 யுவான் அதாவது 1.14 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version