உலகம்

சீனாவின் முக்கிய மாகாணத்தில் திடீர் அவசரநிலை பிரகடனம்!

Published

on

சீனாவின் முக்கிய மாகாணமான ஹைலோங்ஜியாங்கில் கொரோனா பரவல் ஏற்பட்டத்தையடுத்து திடீர் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா, தற்போது உருமாறிய கொரோனாவில் வந்து நிற்கிறது. அங்குள்ள ஹைலோங்ஜியாங் என்ற மாகாணம் மிகமுக்கியமானதாகவும். ஹைலோங்ஜியாங்கில் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 12 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தாக்கியுள்ளது.

இதனால் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில், ஹைலோங்ஜியாங் மாகாணம் முழுவதும் திடீரென அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திடீர் அவசர நிலை பிரகடனத்தால் சுமார் 3.5 கோடி மக்கள் வீட்டிற்குள்ளையே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சூழலில், ஏற்கனவே தலைநகர் பீஜிங்கில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கொரோனாவுக்கான இரண்டாவது தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர். கொரோனா வீரியம் குறைந்திருந்தாலும், புதிய வகை கொரோனாவால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version