இந்தியா
மனிதர்கள் போலவே துணி துவைக்கும் சிம்பன்ஸி குரங்கு – வைரல் வீடியோ
குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே செயல்படும் விலங்கினம் என்றால் அது குரங்குதான். அதிலும் சிம்பன்ஸி குரங்கு மனிதரை போலவே நடக்கும். சிம்பன்ஸி குரங்குகள் மனிதருடன் நெருக்கமாக பழகும் குணம் கொண்டது.
ஏற்கனவே, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. மனிதரைப்போலவே சிகரெட் பிடிப்பது, வாட்டில் பாட்டில் தண்ணீர் குடிப்பது என பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது ஒரு சிம்பன்ஸி குரங்கு மனிதர்களை போலவே துணி துவைக்கும் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அதிலும், அந்த குரங்கு சோப்பு போட்டு மனிதர்களை போலவே துணியை துவைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல் அனைத்து விஷயங்களையும் செய்யும் குரங்கு ஒரு மாதுபானக்கடையில் புகுந்து சரக்கடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram