செய்திகள்

இந்த வயசுல இப்படியா?… சரக்கை அசால்ட்டாக குடிக்கும் சிறுவர்கள்.. அதிர்ச்சி வீடியோ….

Published

on

மதுப்பழக்கம் தீங்கானது என பல இடங்களில் எழுதி வைத்திருந்தாலும், மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுபாட்டிலேயே எழுதி வைத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குடிக்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அரசாங்கமும் தமிழகத்தில் டாஸ்மாக்கை நடத்தி பல கோடி வருமானத்தை ஈட்டி வருகிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் எந்த அரசாங்கமும் அதை கண்டுகொள்வதில்லை.

ஒருபக்கம் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் குடிப்பழக்கம் உள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். தற்போது குடிப்பழக்கம் இல்லாதவர்கள் மிகவும் சொற்பமாக இருக்கிறார்கள். குடிப்பழக்கத்தை அசிங்கமாக நினைத்த காலம் போய் தற்போது அது ஒரு சமூக பழக்கமாக மாறிவிட்டது. இதில், அதிர்ச்சி என்னவெனில் 20 வயதுக்கு கீழே உள்ளவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதுதான். கல்லூரி பெண்கள் கூட மது அருந்தும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 4,5 வயது சிறுவர்கள் ஒரு இடத்தில் அசால்ட்டாக மது அருந்தும் வீடியோ வெளியாகி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒருவர் அவர்களுக்கு மதுவை ஊற்றிக்கொடுக்க அந்த சிறுவர்கள் உற்சாக மிகுதியில் அதை வாங்கி குடிக்கின்றனர். இது தமிழகத்தில் எந்த ஊரில் நடந்தது என தெரியவில்லை.

seithichurul

Trending

Exit mobile version