தமிழ்நாடு

அம்மா, அப்பா இல்லாத சிறுமிகளை சீரழித்த காமுகன்!

Published

on

மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்கள் சிலர் காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்குள்ள ஆதரவற்ற சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

காப்பகத்தை நடத்தி வந்தவர்களில் ஒருவரான ஆதிகேசவன், சிறுமிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை வேறு காப்பகத்துக்கு அனுப்பிய அதிகாரிகள் மற்ற சிறுவர்களையும் வேறு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைத்த போலீசார் ஆதிகேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மற்றொரு நிர்வாகியான ஞானப்பிரகாசத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version