தமிழ்நாடு

மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை: கூடுதல் கட்டுப்பாடுகளா?

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினந்தோறும் 10,000 என்று இருந்த பாதிப்பு தற்போது 17 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாளில் 20 ஆயிரத்தை தொட்டுவிடும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏற்கனவே மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் புதிய அரசு பதவியேற்றவுடன் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version