சினிமா செய்திகள்

ஒரு வழியாக ‘ஓகே’ சொல்லியுள்ளார் ‘செஸ்’ விஸ்வநாதன் ஆனந்த்!

Published

on

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகக் கூடிய திரைப்படத்துக்கு ஆனந்த் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் செஸ் உலகில் பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கப் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் காத்துக் கொண்டிருந்தனர். நீண்ட யோசனைக்குப் பின் ஆனந்த தற்போது தனது பயோபிக் திரைப்படத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரை உலகில் தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா, ஜீரோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் செஸ் விஸ்வநாதன் ஆனந்த் திரைப்படத்தை இயக்க உள்ளார். சிறு வயது முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனது வரையிலான வாழ்க்கை வரலாறை இத்திரைப்படம் காட்சிப்படுத்த உள்ளது.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் தற்போது நடிகர்கள் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் நடிப்பில் உருவாகி வரும் ‘அத்ரங்கி ரே’ படப்பிடிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version