சினிமா
லோஸ்லியாவை சேரன் தொட்டுப்பேசக்கூடாது: பாத்திமாபாபு பகீர்!
நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் செய்திவாசிப்பாளர் லோஸ்லியா கலந்துகொண்டுள்ளார். இவரது தந்தை சேரனை போல் இருப்பதால் பிக் பாஸ் வீட்டில் உள்ள இயக்குநர் சேரனை அப்பா என்றே அழைக்கிறார் லோஸ்லியா.
இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த முதல் வெளியேற்றும் படலத்தில் குறைவான வாக்குகளை பெற்ற நடிகை பாத்திமா பாபு வெளியேறினார். இதனையடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாத்திமா பாபு, இயக்குநர் சேரன் லோஸ்லியாவின் கன்னத்தை தொட்டு பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்றார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, லோஸ்லியா, சேரனை அப்பா என்று அழைத்தாலும், அது உண்மையான உறவு கிடையாது. சேரன் தவறான எண்ணத்துடன் லோஸ்லியாவிடம் நடந்து கொள்ளவில்லை. அவருக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை. இருப்பினும், லோஸ்லியாவிடம் இருந்து சேரன் சற்று தள்ளியிருப்பது நல்லது என கூறியுள்ளார்.
சேரன், லோஸ்லியாவின் கண்ணத்தை தொட்டு பேசுவதை தான் பாத்திமா பாபு இவ்வாறு கூறியுள்ளார். மேலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா குறித்து பேசிய பாத்திமா பாபு, அவர் அருவறுக்கத்தக்க வகையில் நடந்துகொள்வதாக கூறினார்.