சினிமா

சேரனை அவமானப்படுத்திய சரவணன்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற பிரபல இயக்குநர் வலியுறுத்தல்!

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் தொடக்கம் முதலே சரவணன் சேரன் மீது தனிப்பட்ட விரோதத்தில் வார வாரம் நாமினேட் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது விவாதம் செய்துகொண்டிருந்த போது சரவணன் சேரனை வாயா, போயா என அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் ஒருமையில் பேசினார். மேலும் அவர் லூசு மாதிரி பேசிக்கொண்டு இருப்பதாகவும், அப்படித்தாண்டா பேசுவேன் எனவும் தரைக்குறைவாக பேசினார்.

தன்னை இப்படி தரக்குறைவாக பேசினாலும் பொறுமை இழக்காத சேரன் அதனை அமைதியாக எதிர்கொண்டார். மேலும் மற்ற போட்டியாளர்களிடம் சரவணன் சேரன் குறித்து தனக்கு முன்னேர இருந்த ஒரு பகையை தன்னை அறியாமல் உளறிவிட்டார். இந்நிலையில் பிரபல இயக்குநர் வசந்த பாலன் சேரனுக்கு ஆதரவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன். உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன். வித்யாகர்வத்துடன், நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது. பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் என அற்புதமான இலக்கியப்படைப்புகள். திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.

காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது. நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்றுதான் நினைப்பார்கள். அறியாமை என்ன செய்ய… உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள். இயக்குநர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள். ஆகவே, கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version