தமிழ்நாடு
சென்னை புறநகர் ரயில் சேவை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பா?
சென்னை புறநகர் ரயில் சேவையை விரைவில் குளிர் சாதன பெட்டிகளுடன் இயக்க முடிவு திட்டமிட்டு வருகின்றனர்.
எனவே புறநகர் ரயில் சேவையை சென்னை மாஸ் ரேபிட் டிரான்ஸிட் நிறுவனத்திடம் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு சென்னை பீச் ரயில் நிலையம் முதல் பரங்கி மலை (சைண்ட் தாமஸ் மவுண்ட்) ரயில் நிலையம் வரை குளிர் சாதன பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் இயக்கப்படும்.
மெட்ரோ நிர்வாகத்திடம் இந்த வழித்தடத்தை ஒப்படைக்கும் முன்பு சென்னை பீச் – எக்மோர் ரயில்வே நிலையம் இடையில் புதிதாக ஒரு ரயில் பாதை நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.