தமிழ்நாடு

’பீஸ்ட்’ படம் பார்க்கும்போது தகராறு: சென்னையில் இளைஞர் அடித்து கொலை!

Published

on

 ’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை பார்க்கும்போது லோகேஷ் என்ற கார்த்திக் என்பவருக்கும் ஒரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து நேற்று லோகேஷ் என்ற கார்த்திக் தனது தம்பி வெங்கடெஷ் உடன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சரமாரியாக பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தி லோகேஷ் கொலை செய்யப்பட்டார். அவரது சகோதரர் வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார் .
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது ’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.
seithichurul

Trending

Exit mobile version