தமிழ்நாடு

சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மூன்று தலைமுறை பெண்கள்!

Published

on

சென்னையை சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னை காவேரி மருத்துவமனையில் 102 வயதான கமலா அம்மாள் என்பவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் வந்து கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டார். கமலா அம்மாள் அவர்களின் 74 வயது மகள் ரமா சந்திரன் மற்றும் 58 வயது பேத்தி சுகுணா பிரேம்குமார் ஆகியோர் கொரோனா போட்டு கொண்டனர்.

மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி நாடு முழுவதும் போடப்பட்டு வருவதை அடுத்து பலர் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் ஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த மூன்று பெண்களுக்கும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version