தமிழ்நாடு

கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட சென்னை பெண் பரிதாப பலி: தவறான சிகிச்சையா?

Published

on

கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட சென்னை பெண் பரிதாபமாக பலியானதை அடுத்து அவரது மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என அவரது குடும்பத்தினர் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு என்ற பகுதியில் ஆட்டோ டிரைவரான சதீஷ்குமார் என்பவருக்கு என்பவரின் வினோதினி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இதனை அடுத்து வினோதினி கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த திங்கட்கிழமை அவருக்கு கருத்தடை சர்ஜரி செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தவறான கருத்தடை சிகிச்சையின் காரணமாக தான் தனது மனைவி இறந்து விட்டதாக அவரது கணவர் மற்றும் உறவினர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை செய்யப்படும் என்றும் உரிய விசாரணைக்கு பின்னர் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version