தமிழ்நாடு

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை.. கடும் பனிப்பொழிவு!

Published

on

சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

சென்னை வானிலை மையத்தின் கணிப்புபடி இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனுடன் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 8ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் அதிகாலை முதலாக கோயம்பேடு, கிண்டி, மந்தைவெளி, மேற்கு மாம்பலம், அசோக்நகர், மயிலாப்பூர், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்கழி மாதத்தில்   குளிர்கற்று வீசும் போது  தற்போது மேலும் மழைபொழிவு நீடிப்பது புவியின் வெப்பநிலையை குறைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை முதலே மழை நீடித்து வருகின்றது. வரும் 12ஆம் தேதி வரை இவ்வாறு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version