செய்திகள்
சென்னையில் மிகவும் மந்தமான வாக்குப்பதிவு!.. 9 மணி வரையிலான அப்டேட்…..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் காலை 7 மணி முதல் 9 மணி வரை வெறும் 3.69 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த நேரத்தில் அதிக வாக்குகள் பதிவாகும். ஆனால், சென்னயில் மந்தமான வாக்குபதிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.