தமிழ்நாடு
117 பேர்களின் பட்டம் ரத்து: சென்னை பல்கலை எடுத்த அதிரடி நடவடிக்கை!
117 பேர்களின் பல்கலைக் கழக பட்டத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்தார்கள் என்பதும் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எந்த பட்டப்படிப்பிலும் சேராமல் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதி பட்டம் ம் பெற்றதாக 117 பேர்கள் மீது புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த பல்கலைக்கழக அதிகாரிகள் 117 பேர்கள் எந்த படப்பிடிப்பிலும் சேராமல் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதி பட்டம் பெற்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் அனைவரது முடிவுகளையும் சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1980-ஆம் முதல் அரியர் வைத்தவர்கள் தேர்வு எழுதலாம் என 2020 ஆம் ஆண்டு சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 117 மோசடியாக பட்டம் பெற்று உள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த 117 பேர்கள் தவிர வேறு யாரும் இதேபோன்று பட்டம் பெற்று உள்ளார்கள? என்பது குறித்து விசாரணை செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக விசாரணை குழு ஒன்று அமைத்து உள்ளதாகவும் துணைவேந்தர் கௌரி அவர்கள் தெரிவித்துள்ளார். எந்தவித பட்டப்படிப்பும் படிக்காமல் 117 பேர் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.