தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு

Published

on

சென்னையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெறும் என்பது தெரிந்ததே. அப்போது தமிழக முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றுவார் என்பதும், அணிவகுப்பு நடைபெறும் என்பதும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் சுதந்திர தின நிகழ்ச்சியில் உள்ள வழக்கமான நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்பதால் சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும்வரை சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த இந்த அறிவிப்பின்படி வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள போக்குவரத்து குறித்த மாற்றம் குறித்த தகவல்கள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version